துருக்கி நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.
மேலும் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்செயல்களை புரிய முனைந்தவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி ஏர்டொகன் தெரிவித்துள்ளார்.
இது தேசத் துரோக குற்றமென தெரிவித்துள்ள அவர் இதனை புரிய முனைந்தவர்கள் கடும் விலையை கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு காரணம் மதகுருவான பெதுல்லா குலன் என துருக்கி நாட்டு பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இராணுவ சதிப் புரட்சியை முறியடித்துள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ஏர்டொகன் , பெதுல்லா ஆதரவுப் படையினரே புரட்சியை ஏற்படுத்த முயற்சித்த தாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை சதிப் புரட்சியில் ஈடுபட முயன்றதாக குற்றஞ்சாட்டீன் பேருல் 130 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவம் வீதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த வேளையில், தனது ஆதரவாளர்களை தடைகளை மீறி வீதிக்கு வந்து நாட்டைக் காக்கும் படி கோரியிருந்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி ஏர்டொகன், சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 42 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக அந்நாட்டு தலைநகர வான்பரப்பில் விமான ங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த து.
எனினும் இன்னும் யார் கையில் துருக்கியின் கட்டுப்பாடு உள்ளது என்பது தொடர்பில் முரண்பாடு நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.