ஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும், இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இம்மாத இறுதியில் பல்கேரியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகியோர் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக இயக்குனர் சிறுத்தை சிவா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் தெரியாத ஒரே விஷயம் இந்த படத்தின் வில்லன் யார்? என்பதுதான்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகன், வில்லன் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் அஜித்தே நடிக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
FBI அதிகாரி மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களிலும் அஜித் நடிப்பது உறுதியானால், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது.