காலி - மாத்தறை பிரதான வீதியில் ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேரூந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் சகோதரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் முறையே 25 மற்றும் 27 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.