யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலமைகள் குறித்து ஆராயும் பொருட்டு மூன்று அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
அமைச்சர்களான டி.எம் சுவாமிநாதன், அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன ஆகியோர் இதில் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தற்போது பல்லைக்கழக மாணவ தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழகம் காலவரையரை இன்றி மூடப்பட்டது.
இந்த நிலையில், நாளைய தினம் பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக பகுதியளவு திறக்கப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.