மலர்ந்தும் மலராத புன்னகையோடு மிரளும் விழிகளோடு தமிழ் சினிமாவில் சுற்றி வருகின்றவர் நடிகை ஜனனி ஐயர். இவர் நம்பியிருந்தது அண்மையில் வந்த தெகிடி திரைப்படத்தைத் தான் என்றாலும், அது என்னவோ அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.
ஆனாலும், மலையாளம் அம்மாடி நீ இங்க வா என்கிற ரேஞ்சில் அள்ளி அனைத்துக் கொண்டது. கடந்த வருடம் மட்டும், ஜனனியின் நடிப்பில் வந்த 3 மலையாளப் படங்களும் தேவதைக்கு நல்ல பெயரையும் புகழையும் வழங்கியுள்ளன.
சரி, தமிழ் தான் கை கொடுக்கவில்லையே வருகின்றதில் நம் திறமையைக் காட்டுவோம் என்ற எண்ணத்தில் அம்மணியும் மலையாளக் கரையோரம் முகாமிட்டார். இருப்பினும், நாங்களும் விடமாட்டோமென ஒருவர் ஓடிச் சென்று நம்ம இரசிகர்களுக்காக அம்மணியை தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்.
கௌதம் மோகன் இயக்கம் புதிய படத்தில், மலையாள இளம் நடிகர் ஆசித் அலி ஜோடியாக நடிக்கிறார்.
இங்க தான் விசயமே ஒளிஞ்சிருக்கு. இந்த ஆசித் அலி, ஏற்கனவே மலையாளத்தில் ஜனனியுடன் ஒரு படத்தில் டூயட் பாடிய கில்லாடிதான்.
யாருடைய சிபார்சின் பேரில் மலையாள காளை, தமிழுக்கு தாவியதோ என்று பலரும் கேட்கையில், இது அம்மணியின் வேலையாக இருக்கலாம் என்று எங்கிருந்தோ ஒரு அசரீரி.
#ஓஹோ, கதை அப்பிடி போகுதோ? என்னம்மா அங்க சத்தம்.....? -கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-