அண்மையில் மருதானை பிரதேசத்தில் காரொன்றின் மீது தாக்குதல் நட த்திய பஸ் நட த்துனர் மற்றும் மற்றொருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திகன- கொழும்பு வீதியில் பயணிக்கும் பஸ்ஸொன்றில் சேவையாற்றும் நபர்களே அவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவர் மீதும் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவர்களது அனுமதிப் பத்திரமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் காணொளி கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.