இளையதளபதி விஜய் கடும் கோபத்தில் - 'தல'யின் "என்னை அறிந்தால்" காரணம்......???பொங்கலன்று திரையரங்குகளில் பொங்கவிருந்த 'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" திரைப்படம், நாளை 29-ம் திகதி ரசிகர்களின் மனங்களை சந்தோசத்தில் பொங்க வைக்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் நாளையும் படம் வெளியாகவில்லை. எதிர்வரும் 5-ம் திகதியே "என்னை அறிந்தால்" தன்னை அறியவைக்கும் என மறுபடியும் அறிவித்திருக்கிறார்கள் 'தல'அஜித் உட்பட்ட படக்குழுவினர்.
நாளை வெளியாவதாக இருந்த இந்த "என்னை அறிந்தால்" திரைப்படம், வெளியாவதற்கான அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டு, படம் திரைப்படத் தணிக்கைக்குழுவினரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டது. இவ்வாறு அனுப்பப்பட்ட படம் வெளியாவதற்கான சிக்கலும், இங்கே தான் ஆரம்பித்ததாம். U சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்து அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் தான் கிடைத்துள்ளதாம்.
மறுபடியும் திரைப்படத் தணிக்கைப்பிரிவின் மீள்பார்வைக்குழுவிற்கு "என்னை அறிந்தால்" திரைப்படத்தின் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில்,இன்றைய தினம் படத்தை மறுபடியும் பார்த்து, படத்தின் சான்றிதழுக்கான மீள்முடிவை எடுக்கவுள்ளனர் தணிக்கைக் குழுவினர். அதனால் எதிர்வரும் 5-ம் திகதி "என்னை அறிந்தால்" கண்டிப்பாக வெளியாகுமென உறுதியாக சொல்கிறார்கள் படத்தின் தயாரிப்புப் பிரிவினர்.
இது இவ்வாறிருக்க, "என்னை அறிந்தால்" படம் காரணமாக இயக்குனர் அட்லீக்கும் நம்ம இளையதளபதி விஜய்க்கும் இடையே முறுகல்நிலை தோன்றியிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. இந்த முறுகல்நிலையானது மிகவும் பரதூரமானதென கோடம்பாக்க தகவல்கள் சொல்கின்றனவாம்.
இளையதளபதி விஜய்ஜை வைத்து இயக்குனர் அட்லீ ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்தநிலையில் விஜய்யிடம் கதை சொல்லப்பட்டு விஜய் அந்தக்கதையில் நடிப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தநிலையில் "என்னை அறிந்தால்" படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகிய நிலையில், விஜய்யை வைத்து அட்லீ இயக்கவிருக்கும் புதிய படத்தின் கதை "என்னை அறிந்தால்" கதையை மிகவும் ஒத்துப்போவதாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக அட்லீயிடம், விஜய் ரொம்பவே கோபமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்தநிலையில், வெளியாகவிருக்கும் "என்னை அறிந்தால்" படத்தை முதல் காட்சிக்கே சென்று பார்த்துவிட்டு வருமாறும், அவ்வாறு இரண்டு கதைகளும் வேறு வேறு என்றால் தன்னிடம் வந்து சொல்லுமாறு கூறியிருக்கிறார் விஜய். அது மட்டுமல்லாமல் கதைகள் ஒத்துப்போகுமாக இருந்தால் வேறு கதையோடு வருவதென்றால் மட்டும் , தன்னை வந்து சந்திக்குமாறும் இளையதளபதி உத்தரவு போட்டிருக்கிறாராம். அதேவேளை, நாம் இன்னும் படத்தை ஆரம்பிக்கவே இல்லையே, அதற்குள்ளாகவே கதையில் பிரச்சனையா...? என ரொம்பவே குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளாராம் விஜய்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் நம்ம சூப்பர்ஸ்டார் மாப்பிள்ளை தனுஷ் தன்னுடைய "காக்கி சட்டை"யை கழட்டவும் "என்னை அறிந்தால்" காரணமாகியிருப்பதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. இந்த இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என வெளிவந்த செய்தியை அடுத்து, இயக்குனர் கெளதம்மேனனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "என்னை அறிந்தால்" படத்தின் கதை பற்றி பேசியிருக்கிறார் "காக்கிசட்டை" தயாரிப்பாளரான தனுஷ். அதற்குப் பின்னரான சில நாட்களில் வேறொரு பட நிறுவனத்திற்கு "காக்கிசட்டை" கைமாறியுள்ளதாகவும், இதன்மூலம் தனுஷ் தப்பிக்கொண்டுள்ளதாகவும் தென்னிந்திய தமிழ் சினிமாவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் காதோடு காதாகக் கதை பேசுகின்றன.
எது எப்படியோ, "என்னை அறிந்தால்" வருகைக்காக 'தல'அஜித் மட்டும் காத்திருக்கவில்லை. 'தளபதி' விஜய்யும், சுள்ளான் தனுஷும் கூட காத்திருக்கிறார்கள் என்பது தான் சுவாரஸ்யமான தகவல் என்கிறது கோடம்பாக்கம் பக்கமிருந்து வீசும் காற்று.....
பழமொழி: எள் காய்கிறது எண்ணைக்கு; "..........................”??????
*கணேசமூர்த்தி ராகவன்.