தமிழில் வந்தார் நடித்தார் சென்றார் என்றது போல பாவனாவின் வருகையும் முடிவும் அமைந்து விட்டது. அழகான நடிகை, நடிக்கத் தெரிந்தவர் என்று நல்ல அம்சங்கள் பல இருந்தும் பாவனாவை தமிழ் சினி உலகம் ஓரங்கட்டியது யார் தப்போ?
தமிழ் இந்த பட்சி ''சித்திரம் பேசுதடியில்'' தான் அறிமுகமானது என்பது நமக்கு தெரியும். ஆனாலும், மலையாளத்தில் அதற்க்கு முதலே 20 படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறது இந்த மலையாள மங்கை.
வாய்ப்பில்லாமல், அல்லாடுகிறார் பாவனா என்றெல்லாம் பல கதைகள் வந்தன. ஆனாலும், நானா அப்பிடி? என்கிற அளவில் பாவனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
அதாவது மலையாள கன்னட படங்களில் இப்பொழுதும் முன்னணியாக நடித்து வரும் பாவனா, மலையாளத்தில் இயக்குனராக வர விரும்பும் ஒரு இளைஞருக்காக தானே அவரது குறும்படத்தில் நடித்துக் கொடுக்க முன்வந்துள்ளார். 3 கதைகளைக் கொண்ட கருவில் அமையும் கதையாகவே இந்த குறும்படம் அமைந்துள்ளது. நானே நடிக்கிறேன் என, அந்த வாலிபருக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் பாவனா.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-