அம்பலாங்கொடை பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்து 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த பெண்ணின் உறவினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். காசோவை ஒன்றை வங்கியில் மாற்றி எடுத்துச் செல்லும் போது குறித்த பெண்ணிடம் ஆயுதங்களைக் காட்டி இரண்டு பேர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியில் நகருக்கு அழைத்துவந்த அவரது உறவினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.