அவரது இறுதிக்கிரியைகள் மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் இக்கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தகரின் தந்தையிடம் கப்பம் கோரப்பட்ட அழைப்பானது கேகாலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழைப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பில் பத்திரிக்கைகள் சில தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளன.
வர்த்தகர் சுலைமானுடன் வியாபார ரீதியான தொடர்பைப் பேணி வந்த இன்னுமொரு வர்த்தகரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான வழக்கொன்று தொடர்பிலேயே இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது.
மேலும் கொள்ளுப்பிட்டிய மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் இருந்து சி.சி.டிவி ஆதாரங்களை பொலிஸார் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வர்த்தகர் சுலைமானின் வீட்டின் சி.சி.டிவியில் எவ்விதமான காட்சிப் பதிவுகளும் இருக்கவில்லை என்ற தகவலொன்றும் வெளியாகி உள்ளது.
இதேபோல கொலையுடன் உறவினர்கள் எவரும் தொடர்புபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்னும் 24 மணித்தியாலங்களில் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக குறித்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.