ஹிந்தியில் சவாலான வேடங்களை ஏற்று நடிப்பவர் நடிகை வித்யா பாலன். அவருக்கு என்றுதான் பல படங்கள் இயக்கப்படுவது போல இருக்கும். அந்தளவுக்கு நடிப்பில் நல்ல பெயர் பெற்றுள்ளார்.
அத்தோடு, வித்யாபாலனை தேடிவரும் வாய்ப்புக்கள் அனைத்தும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களாகவே வருகின்றன.
இப்பொழுதும் வித்யாபாலனைத் தேடி இன்னுமொரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வந்துள்ளது. அவர்தான் அண்மையில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ. இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் இவரது பாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனை அணுகியுள்ளார்கள்.
ஆனாலும், இது தொடர்பில் வித்யாபாலன் இன்னும் நடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-