இதன்போது கைதான ரமித் பின்னர் பிணையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இச் சொகுசு கார் முன்னாள் அமைச்சரான கெஹலியவுக்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன பதிவு எண் தகட்டையும் குறித்த கார் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் நேற்று கறுவாத்தோட்டை பொலிஸுக்கு வந்த கெஹலியவிடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியிருந்தனர்.
இதன்போது பதிலளித்த அவர் , இது பிணை வழங்கக்கூடிய வழக்கென தெரிவித்ததுடன், தனது மகன் குடிபோதையில் இருந்தமை அறிக்கையின் பின்னரே தெரியவருமென குறிப்பிட்டார்.
மேலும் , இது இலங்கையில் நடந்த முதல் விபத்தல்லவெனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.