தனது மாமியின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி பணம் களவாடிய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கெகிராவ பொலிஸாரால் இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
66 வயது பெண்ணே இம்முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். குறித்த மாமியாரின் மருமகள் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணமே களவாடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள பெண் 2000 ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா வரை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.