இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ரவீண்ர விஜேகுணரட்ன அமெரிக்க பெண்டகன் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க முப்படைகளை சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான பயிற்சி, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் உட்பட பல இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.