19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ருத்ரமாதேவி எனும் அரசியாரின் வாழ்க்கையை சொல்லும் படமாக தயாராகி வருவதே அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி.
குணசேகர் இயக்கிவரும் இப்படம் பல நாட்களாக பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டு வருகிறது. எக்கச்சக்கமான பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. அத்தோடு, இதில் வீரப் பெண்மணியாக நம்ம அனுஷ் நடித்து வருகிறார்.
கலை இயக்குனர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பல பிரம்மாண்டமான அரங்கங்களை படத்துக்காக உருவாக்கியுள்ளார்கள். இவற்றோடு ஒரிஸாவில் 1000 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குபற்றும் போர்க்கள சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்கு மத்தியில் இன்னுமொரு ஆச்சர்யமான செய்தியுமுண்டு!
அனுஷ்கா இப்படத்திலே அணியும் தங்க ஆபரணம் ஒன்று மிக நுட்பமாக தனியார் நகைத் தொழிலகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது. யாவை பயன்படுத்தப்பட்டதும் மிக விரைவில் ஏலத்தில் விடப்படவுள்ளன. இந்த நகைகளை வாங்குவதற்கு ஏகப்பட்ட கிராக்கி இப்பொழுதே நிலவுவதாக சொல்லப்படுகிறது.
நமக்கு இது ஒத்துவராதுப்பா எனும் ரேஞ்ச் தான்! என்ன விலை தெரியுமா மக்கள்ஸ்? ஐந்து கோடிகள் கடந்து செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொன்னேன்தானே? கேட்டிங்களா?
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-