தானே தனக்கு சூனியம் வைத்த கதையாக வடிவேலுவின் படலம் முடிந்து போன கதையாக இருந்தது. ஆனாலும், நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என்று மீண்டும் எலி மூலம் களம் புகுந்துள்ளார். அதுவும் விஜய்யின் புலி படத்துக்கு, எதிரான படம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இப்பொழுது ஒரு செய்தி பிறந்திருக்கிறது.
அதாவது, ஏற்கனவே வடிவேலு மற்றும் விஜய் பல படங்களில் இணைந்து நடித்து தமது நடிப்பின் மூலமாக இரசிகர்களை அள்ளிக் கொண்டவர்கள். பகவதி, வசீகரா, போக்கிரி, சுறா, காவலன் போன்ற படங்களில் வடிவேலுவும் விஜய்யும் இணைந்து நடித்திருந்தார்கள். காலம் கடந்தும் இன்றும் இரசிக்க வைக்கும் காட்சிகளாக அவை பதியப்பட்டுள்ளன.
இந்த வரிசையில், இப்பொழுது அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய்யும் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிகிறது. வடிவேலுவின் எலியும் விஜய்யின் புலியும் நிறைவடைந்ததும், அடுத்த புதுப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
பார்க்கலாம்!! அன்று நம்மை சிரிக்க வைத்ததைப் போல, இந்த இணைவும் சிரிக்க வைக்குமா என்று பார்ப்போம்!!
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-