'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தனது அடுத்தப்படமான 'பென்சில்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவருடைய மூன்றாவது படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.
இப்படத்தில் நடிப்பது குறித்து, தனது நடிகர் அவதாரம் குறித்தும் கூறிய ஜி.வி, "நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’
“தற்பொழுது கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். .விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன் த வே டி செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் சொல்லினார்
CastroRahul