தாழ் பணிந்த சிம்பு - வாழ்வு கொடுப்பாரா ரஜினி மகள் ஐஷு.....?????கோடம்பாக்கத்தில் குழப்படிக்குக் குறைவில்லாத ஒரே நடிகர் என்றால் வாலு நடிகர் சிம்பு தான். லிட்டில் சூப்பர்ஸ்டார் என சொல்லி சுற்றித்திரிந்த இவர் சூப்பர்ஸ்டார் மகளுக்கும் நூல்விட்டு தன் காதல்வலையில் சிக்கவைத்தவர் என்றால் தப்பில்லை.
வாலுத்தனத்துக்குக் குறைவில்லாத இந்த மன்மதன் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளை எப்படியாவது தன் காதல்வலையில் சிக்க வைப்பதில் செம கில்லாடி. முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியின்மகள் ஐஸ்வர்யா, பின்னர் நயன்தாரா, அவரைத் தொடர்ந்து ஹன்சிகா என இவருடைய பட்டியலில் நடிகைகளின் பெயர்கள் தொடர்கின்றன. இவ்வாறு சிக்குவது நடிகையானாலும் இறுதியில் அவஸ்தைப்படுவதும், வருந்துவதும், தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொள்வதும் என்னமோ இவர்தான்.
நடிகைகளிடம் தன் பெயரைக் கெடுத்துக்கொண்டதோடு மட்டும் நிறுத்தவில்லை இந்த விரல்வித்தை மன்மதன். படப்பிடிப்பு தளங்களிலும் படக்குழுவினருக்கு சரியாக ஒத்துழைப்புத் தருவதில்லையாம். படப்பிடிப்பு தருணங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை, தயாரிப்பாளர்களுடன் முரண்பாடு என தமிழ்த்திரையுலகில் தன் பெயரைத்தானே கெடுத்துக்கொண்ட பெருமை பெற்றவரும் இவரே.
இந்தநிலையில், சிம்புவை வைத்து எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க முன்வராததால் இரண்டு வருடங்களாக இவரின் நடிப்பில் எந்தவொரு படமும் வெளிவராத நிலையில், நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இந்த மாதமளவில் வெளியாகவுள்ளன வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள். இப்படி வெளிவரவுள்ள படங்களையும் வெளியிடுவதில் உள்ள சில சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமான ஈரோஸ் நிறுவனத்திடம் நேரில் சென்று தன் படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டிருக்கிறாராம் சிம்பு. இந்த ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய சென்னை கிளைக்கு தற்போது பொறுப்பேற்றிருப்பவர் யாரென்று பார்த்தால் இந்த சிம்புவின் முன்னாள் காதலி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தான். இந்த நிலையில் அக்காவிற்கு தங்கை எதிர்மாறாக இருக்கவா போகிறார்...? என தமக்குள் வினவிக்கொள்கின்றார்களாம் தமிழ்த்திரையுலகினர்.
இது இப்படியிருக்க, சிம்புவின் மீதுள்ள கோபத்தினால் அவரை சினிமாவில் கீழ்நிலைக்கு கொண்டுவரவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சினிமாவில் முன்னிறுத்தி அவர்களை மேலே கொண்டுவர ஐஸ்வர்யா முயற்சிப்பதாக செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தன்மானத்தை அடகுவைக்கும் சிம்புவின் இந்த அடிபணிதல் இடம்பெற்றிருக்கின்றதாம். அதுமட்டுமல்லாமல் அடுத்து, தான் நடிக்கவிருக்கும் படத்தை ஈரோஸ் நிறுவனம் சார்பாக நீங்களே தயாரிக்க வேண்டும் என
சௌந்தர்யாவிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறாராம் இந்த வாலு மன்மதன்.
இவ்வாறு தன் நிலையிலிருந்து இறங்கிக் சென்ற சிம்பு, சௌந்தர்யாவிடம் அபயம் கேட்டதனால் தங்கையின் சிபாரிசிற்கு செவிசாய்த்து மன்னிப்பாரா ஐஸ்வர்யா என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலுக்கின்றன. ..?
சரண் புகுந்தார் சிம்பு.... அபயம் அளிப்பாரா ஐஷு.....??? - கேள்வியுடன் கோடம்பாக்கம்.
*கணேசமூர்த்தி ராகவன்.