சண்டமாருதம் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்துள்ளதால், மீண்டும் நடிப்பில் தன் கவனத்தை திருப்பியுள்ளார் நடிகர் சரத்குமார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். நல்ல நடிப்பை தேர்ந்த பாத்திரங்கள் மற்றும் படங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தவர் இவர்.
பின்னர், அரசியலில் ஈடுபாடு ஏற்படவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனாலும், இடையிடையே காஞ்சனா போன்ற நல்ல படங்களில் நடித்தும் வந்தார். இந்நிலையில், மீண்டும் சண்டமாருதம் படத்தில் நடித்து, படம் அண்மையில் வெளியாகி முதலுக்கு மோசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
எனவே, இப்படம் கொடுத்திருக்கும் உற்சாகத்தால், மீண்டும் புதுத் துணிவோடு தன்னை தேடி வந்த படங்களில் 5 படங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். அவைகளில், மிஸ்கின் இயக்கும் ஒரு படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கும் ஏய் இரண்டாம் பாகத்திலும், சமுத்திரக்கனியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இதுதவிர, கே.ஆர்.செல்வராஜ் இயக்கும் விடியல், வேளச்சேரி ஆகிய படங்கள் வெளியாக தயாராகியுள்ளன. இது தவிர பிற மொழிகளான மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ஒவ்வொரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சரத்குமார்.
ஆக, 2015 சரத்குமாருக்கு இன்னும் வாய்ப்புக்களை வழங்கும் ஆண்டாக அமையும் என்பது இப்பொழுதே புரிகிறது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-