ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயர் பிரதிநிதி குழு ஒன்றினை சந்தித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மக்கள் சமூகம் மற்றும் மத வாழ்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்திலான வருடாந்த ஆசிய ஆயர் மாநாட்டு கூட்டம் இலங்கையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை மக்களுக்கு உதவிகளை கத்தோலிக்க திருச்சபை மூலம் மேற்கொள்வது தொடர்பில் ஆயர் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.