கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த பணிகள் மீரிகம மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு அவசியமான காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.