அங்காரவின் கேன்கயா மாவட்டத்தில் நடந்த கலை கண்காட்சியை பார்வையிட கார்லோவ் நேற்று சென்றார்.
அப்போது, மர்ம நபர்ஒருவர், துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டார்.இதில் அவர் உயிரிழந்தார்.
அவரை சுட்டவர் 22 வயதான 'Mevlüt Mert Altintas' என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் பொலிஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யத் தூதரை சுட்ட அந்நபர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நட த்தியுள்ளார். அதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் துப்பாகிச் சூட்டை நட த்திய அந்நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நட த்தும் போது அந்நபர் " கடவுளே பெரியவன், அலெப்போவில் நாம் இறக்கின்றோம், நீ இங்கே இறந்து போ" எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் ரஷ்யாவும், துருக்கியும் இணைந்து தீவிரமாக உதவி வருகின்றன.
அலெப்போ விவகாரத்தில் ரஷ்யா அநாவசியமாக தலையிடுவதை கண்டித்து, எதிர்ப்பாளர்களால் அங்காராவில் சில தினங்களுக்கு முன் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.