நாட்டில் நல்லிணக்கத்தை கட்யெழுப்புவதற்கு இலக்கியமும், கலாசாரமும் சிறந்த சக்தியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்காக, கலாசாரம் மற்றும் இலக்கியம் என்பன மிக முக்கியமாகும்.
எனவே, இளைஞர்களின் எதிர்ப்பார்ப்புக்களை கருத்திற்கொண்டு பெரியோர்கள் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நோக்கத்தை நிறைவேற்றி நாட்டு மக்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்ப இலக்கியம், கலாசாரம் என்பவற்றினூடாக நடவடிக்கை எடுக்கமுடியும்.
இது மனித சமூகத்துக்கு சிறந்ததொரு சக்தியாகும்.
எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.