தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி விதவிதமான படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஷெல்வா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார் அரவிந்த் சாமி.
இதுபற்றி இயக்குநர் ஷெல்வா அளித்த பேட்டியில், நேர்மையான காவல்துறை அதிகாரியாக அரவிந்த் சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் புது ஜோடி ரசிகர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணும் என்று கூறியுள்ளார்.
சதுரங்க வேட்டை, போகன் உள்ளிட்ட நாலு படங்களில் நடித்துவரும் அரவிந்த் சாமிக்கு 2017 முக்கியமான வருடமாக இருக்கப்போகிறது.