திருகோணமலை எண்ணெய் கட்டிடத் தொகுதியின் நிர்வாகத்தை ஒன்றிணைந்த நிர்வாகம் ஒன்றின் கீழ் கொண்டுவரவுள்ளதாக எரிசக்தித்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று இலங்கை எரிபொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் நான்கு பேர் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கட்டிடத் தொகுதியை மேற்பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது ஐ ஓ சி நிறுவன அதிகாரிகள் தம்மை தடுத்துவைத்திருந்ததாக குறித்த அதிகாரிகள் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த எண்ணெய் கட்டிடத் தொகுதியின் நிர்வாக பணிகள் இந்திய எண்ணெய் கூட்டுத் தாபனத்திற்கு வழங்கியிருந்த நிலையில் அதற்கான ஒன்றிணைந்த நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.