தன்னிகரில்லா தலைவன் இத் தரணிக்கு விடை கொடுத்த நாள் இந்நாள் தன் தேசத்திற்கு ஒளியேற்றிய ஓர் சுடர் ஒளியிழந்த நாள் இந்நாள்
ஆம் லீ குவான் யூ ! ..
ஆத்மார்த்தமாய் தன் தேசத்தை நேசித்த இணையற்ற பெரும் தலைவன், நேரிய பார்வை நிமிர்ந்த நடை பகை வரினும் மனம் தளராது தன் தேசத்தின் மான்பிற்க்காகவும் எழுச்சிக்காகவும் போராடிய நற்குணம் இவை தான் இந்த தலைவனின் அடையாளங்கள்
1923 செப்டம்பர் 16 ஓர் குழந்தையின் ஜனனம் ஆனால் அந்தக் குழந்தை உலகத்தையே தன் பக்கம் ஈர்க்கப் போகும் மாபெரும் தலைவனாக மாறப் போகின்றான் என்று அப்போது யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள் ஆனாலும் மாற்றம் ஒன்றே தன் தேசத்தின் ஏற்றத்திற்கு தேவை என்பதை உணர்ந்தவராய் எத்தனையோ விமர்சனங்களையும் தாண்டி தன் இலக்கு நோக்கி நடை பயின்றார்,ஈற்றில் வெற்றியும் கண்டார் ..கடும் போக்கு வாதி என பலராலும் அறியப்பட்டாலும் கனிவான உள்ளம் கொண்ட லீ நெகிழ்வுப் போக்குடன் காலத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து காலத்தால் அழியாத தலைவனாகவும் மாறி விட்டார் ..
..பிரித்தானியாவின் காலனித்துவ பிடிக்குள் இருந்து விடுபட கடுமையாக போராடிய லீ குவான் மலேசியாவின் கரங்களில் இருந்து விடுபடவும் கரம் கொடுத்தார் மூன்று தாசாப்ததிற்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இத் தலைவனின் சரிதம் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. இயற்கை வளங்கள் பெரிதளவில் இல்லா தேசத்தை உலகின் முன் பெருமை படுத்தி ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து சிங்கபூரினை பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவாக்கி ஒரு அபரிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தினார்.
இத்தகைய மக்கள் தலைவன் பங்குனி திங்கள் 23 ஆம் நாள் இப் பாரிட்க்கு விடை கொடுத்தாலும் காலம் உள்ள வரை காவியத் தலைவனாக மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ..............