குறுகிய காலத்திலேயே பலரின் மனதை கொள்ளைகொண்ட நாயகன் சிவகார்த்திகேயன் பலகுரல் கலைஞனாக தொலைக்காட்சியில் கால் பதித்து தொகுப்பாளராகி நாயகனாக அவதாரம் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே நகைச்சுவை நாயகனாக வலம் வந்த கார்த்தி Action நாயகனாக நடித்து வெளிவந்த படம் காக்கிசட்டை.
இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களோடு பகிந்துகொள்ள எண்ணிய சிவா நேற்று டிவிட்டரில் ரசிகர்களோடு சாட்டிங் மூலம் கலந்துரையாடினார் இதோ உங்களுக்காக அந்த chat
கேள்வி:ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?
பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.
கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?
பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.
கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்
பதில்: புதுபேட்டை தான் தனுஷ் படத்தில் என் மனம் கவர்ந்த படம்.
கேள்வி: பாண்டிராஜ் தானா உங்களுக்கு கே.பி?
பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?
பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்.
கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?
பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.
கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவர் Complete Entertainer
கேள்வி:உங்கள் வாழ்கையின் சிறந்த தருணம் எது?
பதில்:விஜய் சார் இடமிருந்து பெற்ற விருது அதை அப்பாவுக்கு சமரப்பணமாக்கியது.
கேள்வி:இந்த புகழின் காரணமாக நீங்க இழந்த ஒன்று
பதில்:எதுவும் இல்லை
கேள்வி:உங்களை Action நாயகனாக பார்ப்பதற்கு சந்தோஷம். இருப்பினும் உங்களின் நேரத்திற்கேற்ற நகைச்சுவையை மிகவும் விரும்புகின்றோம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
பதில்: "ரஜினி முருகன்" முழு நகைச்சுவை திரைப்படம்
கேள்வி:அனிருத்தின் இசை பற்றி?
பதில்:Energetic
கேள்வி:தனுஷின் போன் நம்பர எப்படி save பண்ணிருக்கிங்க?
பதில்:Genius
கேள்வி:விஜய் சேதுபதியின் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?
பதில்:நல்ல கதையாக இருந்தால் நான் தயார்
கேள்வி:நகைச்சுவையா அதிரடியா பிடிக்கும்
பதில்:நகைச்சுவை
கேள்வி:ஸ்ருதிஹாசன் பற்றி இரண்டு வார்த்தை?
பதில்:எளிமையானவர் சிறந்தவர்
கேள்வி:தலைவர் படத்த எப்போ இருந்து முதல் நாள் முதல் ஷோ பாக்க ஆரம்பிச்சிங்க?
பதில்:தளபதி படத்துல இருந்து
கேள்வி:நீங்க எப்போ வில்லன் கதாபாத்திரத்தில நடிக்க போறீங்க?
பதில்:முதல் நான் சிறந்த நடிகனாகணும் பிறகு பார்ப்போம்
என்று இதுபோல் பல கேள்விகளுக்கு மனதில் தோன்றிய பதில்களை கூறினார்.
-சிவகர்த்திகேயனின் டிவிட்டரில் இருந்து சுட்டது வர்ஷி-