கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ பீ எல் இன் போது பொலிவூட் நடிகர் ஷாருக்கான் மைதானத்தில் வைத்து ரகளையில் ஈடு பட்டமைக்காக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன இதன் மூலம் அவருக்கு அந்த மைதானத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மீது இன்னுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, .அந்த சந்தர்ப்பத்தில் அவர் நடந்த விதம் பற்றி ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டிருந்தன கெட்ட வார்த்தைகளை அதிகமாக பிரயோகித்தார் என்று அவரின் ரசிகர்கள் கூட இதை விமர்சித்த்திருந்தார்கள். அவர் அந்த வார்த்தைகளை பயன் படுத்திய போது அதிகளவான சிறுவர்கள் இருந்தார்கள் என்று இப்போது மீண்டும் எல்லோரின் விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டு தவிக்கிறார்.
இந்நிலையில் அந்த சம்பவத்தின் போது குழந்தைகளின் முன்னால் தகாத வார்த்தைகளை பயன் படுத்தியது குறித்து ஷாருக்கான் மீது அமித் மரு என்ற சமூக ஆய்வாளர் மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதன் பின்னர் குழந்தைகள் முன்னால் தகாத வார்த்தைகளை கூறியமைக்காக வழக்கு தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.