தற்போதைய அரசாங்கம் குறுகிய காலப்பகுதியில் சர்வதேச நாடுகளுடன் சிறந்த உடன்படிக்கைகளை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி – தொடங்வல பாலத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தொழில்துறைக்கு தேவையான ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பெரும்பாலும் எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு மீண்டும் கிடைக்க பெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.