புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் 56 தொழில்நுட்ப குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லை மீள்நிர்ணய அறிக்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், எல்லை மீள்நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்ற விவகாரங்களுக்கான அமைச்சிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக அதனை வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் சந்திப்பை நடத்தவும் இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.