களனி பிரதேசத்தில் இயங்கும் ஆயுதக்குழுவொன்று தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குழு பயங்கரமான முறையில் கொள்ளையில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முழுவதுமாக முகத்தை மறைக்கக்கூடிய தலைக்கவசம் அணிந்த நிலையில் கருப்பு நிற உந்துருளியில் , வத்தளை / கிரிபத்கொடை / வெலிசர / ஜா-ஹெல போன்ற காவற்துறை பிரிவுகளில் வீதியில் செல்லும் நபர்களிடம் இவர்கள் பொருட்களை கொள்ளையிடுவதாக தெரியவந்துள்ளது.
அதேபோல் , எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் நிதி நிறுவனமொன்றிலும் இவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இரு சந்தேசநபர்களையும் கைது செய்வதற்காக தற்போதைய நிலையில் சிறப்பு காவற்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , இந்த கொள்ளையர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை வேண்டியுள்ளனர்.