வந்த வேகத்திலேயே தனது கரகர குரல்மூலம் பல கட்டங்களைக் கடந்து இன்று தனக்கென இடத்தையும் தக்கவைத்துக் கொண்டவர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் கானா பாலா. ஆண்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் பெண்களையும், கணவன்களுக்கு துரோகமிழைக்கும் பெண்மணிகளையும் குறிவைத்து தனது பாடலாக்கங்களை படைத்துவரும் இந்த பாடகர் மீது, இயக்குனர் பேரரசு கண்டித்து கொதித்து எழுந்துள்ளார்.
எப்படி இப்படியாக, பெண்களை அவமதிக்கும் பாடல்களை இவர் மட்டும் பாடுகிறார். இவ்வாறு பெண்ணியத்தை இழிவுபடுத்தும் பாடல்களை எழுதுவதியும், பாடுவதையும் கானா பாலா உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு இனப் பிரிவுகளையும் வக்கிரங்களையும் தொற்றுவிக்காதீர்கள் என்று பொங்கியுள்ளார் பேரரசு.
இதற்க்கு பதில் வழங்கிய பாலா, நான் ஆசையில் இப்படியான பாடல்களை எழுதவில்லை. இயக்குனர்களே என்னை வற்புறுத்துகிறார்கள். நான் வருகின்ற இப்படியான வாய்ப்புக்களையே பயன்படுத்துகிறேன் என்றுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-