பிக்குமார்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஆணமடுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குகொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
சிறந்த மதிப்புள்ள பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள்.
எனினும் இறுதியில் அவர்கள் தமது நற்பெயரை கெடுத்துக்கொண்டே அரசியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் பிக்குகள் தங்களது கௌரவத்தை பேண அரசியலில் ஈடுபடாது சமய தொண்டாற்ற வேண்டும் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.