யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெறவிருந்த நான்காம் வருட கலைத் தேர்வுக்கான முதலாம் அரையாண்டு பரீட்சை இன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவிருந்த கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டமும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் விடுதியில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் காரணமாக குறித்த விடுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே தீ அனர்த்தம் ஏற்பட்டது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடுதியில் தங்கியிருந்த பெண்களை மாற்றிடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.