பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டி பிரதேச செயலாளரை தூற்றிய சம்பவம் தொடர்பில், எதிர்கால தீர்மானம் குறித்து இலங்கை நிர்வாக சேவை சங்கம் இன்று கலந்துரையாடவுள்ளது.
அதன் நிறைவேற்று சபையின் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
அதன்போது இன்றைய தீர்மானம் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக, சங்கத்தின் தலைவர் ரன்ஜித் ஆரியத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி கம்பஹா - திவுலப்பிட்டி பிரதேச செயலாளரை பிரதியமைச்சர் ஊடங்களின் முன்னிலையில் தொலைப்பேசியின் ஊடாக தூற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.