உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாகவே, போர்க்குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணைகளில் இருந்து அரசாங்கத்துக்கு பின்வாங்க நேர்ந்திருப்பதாக த ஏஜ் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மகிந்தராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கான அழுத்தம் அதிக அளவில் பிரயோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இதனை மகிந்த அரசாங்கம் தட்டிக்கழித்து வந்தது.
2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்ற நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு உள்நாட்டில் அனுமதியளித்தது.
இது போர்க்குற்றவிசாரணைகள் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் உள்நாட்டில் எழுந்த அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக, புதிய அரசாங்கமும் இந்த விடயத்தில் இருந்து பின்வாங்க நேர்ந்திருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.