யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் கணவரை இழந்த ஆயிரக் கணக்கான பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களாக உள்ளனர்.
அவர்கள் தங்களது சிறுசிறு தேவைகளுக்காக அரசாங்க அதிகாரிகளை நாடும்போது, பல அதிகாரிகள் பாலியல் லஞ்சம் கோரி வருவதாக சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.