நிலவுக்கு தங்கள் விண்கலத்தை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்தியா.
இந்தியாவின் பி எஸ் எல் வீ சி -37 ரக ராக்கெட்டை ஏவிய சாதனையை தொடர்ந்து ,நிலவுக்கு தங்கள் விண்கலத்தை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்தியாவின் தனியார் நிறுவனமான இண்டஸ் .
இண்டஸ் குழுவால் உருவாக்கப்பட்ட ஈக்கா என்னும் ஒரு சிறிய நான்கு சக்கர ரோவர் நிலவின் மேற்பரப்பில் இயங்குவதைப் போல இயங்கும்.
இண்டஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ரோவர் நிலவை அடைந்து அதனை சுற்றி வர சுமார் 60 மில்லியன் டொலர் வரை செலவாகும் என்று சொல்லப்படுகின்றது .ஈக்கா என்னும் ஒரு சிறிய நான்கு சக்கர ரோவர் 2017 டிசம்பர் பிற்பகுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
நிலவில் விண்கலம் செலுத்தவுள்ள முதல் தனியார் நிறுவனம் என்ற பெயரையும் ,பெருமையையும் இந்தியாவின் இண்டஸ் நிறுவனம் பெற்றுள்ளது .