எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளாமல் இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. காதலுக்காக தனுஷ் தோட்டாவை ஏற்கத் துணியும் ஒரு காதல் ததும்பிய கதை.திரைப்படத்தின் டீஸர் மற்றும் மறுவார்த்தை பேசாதே பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஒரு படி அதிகமானது.
ஆனால் உற்சாகமாக துவங்கிய படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறதாம். காரணம் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளாமல் , அவர் தான் இயக்கும் பவர் பாண்டி பட வேலையே கதி என உள்ளாராம். இது ஒரு பக்கம் இருக்க கௌதம் தனுஷுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். அதனால் தான் அவர் படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திவிட்டாராம். கௌதமின் தயாரிப்பு நிறுவனம் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட்டு அதில் வரும் லாபத்தில் தனுஷுக்கு சம்பளம் கொடுக்க திட்டமிட்டுள்ளதால் தனுஷ் மற்றும் கௌதம் மேனன் இடையே பணப் பிரச்சனை அதனால் தான் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது .