பாலாவுக்காகத்தான் விஜய்யை கைவிட்டாரா?ஜோதிகா .
விஜயின் 61 வது படத்தில் மூன்று நாயகிகள் என்றும் அதில் முக்கியமான வேடத்தில் ஜோதிகா நடிக்கப்போகின்றார் என்றும் ஆரம்பத்தில் செய்திகள் வந்தது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜோதிகா இந்தப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் .அந்த நேரத்தில் இவரது விலகல் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்தது .
காரணம் தெரியாமல் இருந்த ஜோதிகாவின் விலகலுக்கு விடை கொடுத்திருக்கிறது பாலாவின் புதுப்பட அறிவிப்பு .ஜோதிகாவை வைத்துதான் பாலா தன் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் அதற்காக இவர் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் சொல்கிறது .
இதற்காகத்தான் விஜயினுடைய படத்தில் இருந்து ஜோதிகா விலகினாராம் .