வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதமொன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகையானது 4 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஏக்கருக்கு மேல் வயல் நிலம் சேதமான விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
12 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி 2 ஆயிரத்து 360 நீர்த் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 3 ஆயிரம் நீர்த்தாங்கிகளை தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதுவரை ட்ரெக்டர் மற்று பவுசர்கள் வாடகைக்கு பெறப்படும்.
வரட்சியினால் வாழ்வாதார வழிகளை இழந்துள்ள விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்ட விவசாயிகளை பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகளில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.