சிக்கலில் சிக்கிய தெலுங்கானா முதல்வர் ...!
இந்தியாவில் முதல்வர் என்ற வார்த்தைதான் இப்போது ட்ரெண்ட் ஆக இருக்க இன்னுமொரு முதல்வர் சிக்கலில் சிக்கிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் சிலருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று அங்கு 19 கிலோ எடையுள்ள 5.6 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் வைர நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார் இதில் என்ன பிரச்னை என்றால் அரசாங்க பணத்தைப்பயன்படுத்தியே இந்த காணிக்கையை கோவிலுக்கு செலுத்தியுள்ளார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா மாநிலம் உருவானதற்கு நேர்த்திக்கடனாக இந்த நகைகளை காணிக்கையாக அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது இப்படி இருக்க தெலுங்கானா மாநிலத்தின் 7 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு பணத்தில் , மாநில முதல்வர் கோயிலுக்கு காணிக்கை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.