Malabe shooting incident - அனைத்தும் நாடகமாம்!: சைட்டம் மீது மீண்டும் கறும்புள்ளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,164 Views
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக்கொள்ளவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியென தெரியவந்துள்ளது. விஷேட காவற்துறை குழு அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெளியான தகவலுக்கு அமைய துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு மற்றும் நுகேகொடை விஷேட குற்ற விசாரணை பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீது அந்த கல்லூரிக்கு முன்னாள் உந்துளியில் வந்த இரு நபர்கள் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
எனினும் இந்த துப்பாக்கி பிரயோகத்தால் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத நிலையில், அவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் 4 துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்ததாக காவற்துறை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.