ஜீரண சக்தியைக் குறைப்பதால் பலாக்காயை வயிற்று நோயுள்ளவர்கள் சாப்பிடக் கூடாது
உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்வதால் உஷ்ண வியாதியுள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது
தினமும் இரவு படுக்கும்முன் வெதுவெதுப்பான நீர் குடித்தால் மலச்சிக்கலே ஏற்படாது
இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கின் போது எந்த சிக்கலும் இருக்காது
வாழைத்தண்டுச் சாறு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்
குப்பைமேனிக் கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
தினமும் வெறும் வயிற்றில் உணவுக்கு முன் தேன் 2 ஸ்பூன் குடித்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்
பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் வெடிப்பு குணமாகி விடும்.
அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வராது.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.