மாணவர்களின் நிர்வாண காணொளி .3 பேர் கைது...
எல்லா கல்லூரி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இந்த பகிடிவதை சித்ரவதைகள் இடம்பெறுவது வழக்கம்.இவ்வாறே
கண்டி – குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி தகவலின் படி வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இந்த குறித்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பயிற்சி வகுப்பு ஒன்று இடம்பெறும் போது இடம்பெற்றுள்ளது. வகுப்பிற்கு வந்த கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக இந்த குறித்த 3 மாணவர்களும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இந்த மாணவர்கள் தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்புளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை தெல்தெனிய நீதவான் முன் ஆஜர்செய்யவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது