39 வயதுடைய இவர், நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தனது முகத்தில் 15 கிலோ அளவுடைய கட்டியுடன் வாழ்க்கை நடாத்தி வருகிறார்.
சுன்சய்க்கு நான்கு வயது இருக்கும் போதே, அவர் முகத்தில் சிறிய அளவு கட்டி உருவாகி இருந்துள்ளது. எனினும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் இருந்த சுன்சய்க்கு நாளடைவில் முகத்தில் ஏற்பட்ட கட்டி பெரிதாகி இருக்கிறது. இதனை தொடந்து அவரால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை. காலப்போக்கில் அவரது முகத்தை சுற்றி எலும்புகள், தோல் மற்றும் தலை அசாதாரண வளர்ச்சி அடைந்து, பெரிய கட்டியாக உருவெடுத்துள்ளது. பல அறுவை சிகிச்சைகளை செய்தும் ஹூவாங்கால் இந்த நோயிலிருந்து மீள முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
சுன்சய் எங்கு சென்றாலும் பலரால் கேலி,கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும், பரிதாப உணர்வுடன் பார்க்கப்படுவதும், வழக்கமாகி விட்டது.