ஆறு நாள் ஆன குழந்தைக்கு ஆப்ரேஷன்.காரணம் இதுதான்
லண்டனை சேர்ந்த லூயிஸ் மற்றும் டேவிட் தம்பதிகளுக்கு 23 வது வாரத்திலேயே அழகிய குழந்தையொன்று பிறந்துள்ளது.இக்குழந்தை பிறந்து 6 நாட்களிலே அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக குழந்தைகள் 10 மாதத்தில் பிறக்கும் ஆனால் ஒரு சில குழந்தைகள் 38 வாரத்தில் பிறக்கும் .ஆனால் லூயீஸ் தம்பதிகளுக்கு 23 மாதத்திலேயே குறை பிரசவம் ஏற்பட்டுள்ளது.இந்தக் குழந்தையின் எடை 589 .69 கிராம் மட்டுமே..மேலும் இந்தக் குழந்தைக்கு பெருங்குடல் அழற்சியும் இருந்துள்ளது.இந்த பெருங்குடல் சுழற்சியுடன் இக்குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால் இதனை இப்போது பொருட்படுத்தாவிட்டால் குழந்தை இறந்துவிடும் என்பதனால் மிகவும் சிரமப்பட்டு பெற்றோர்களும் மருத்துவர்களும் இக்குழந்தையை காப்பாற்ற போராடியுள்ளனர்.
குழந்தை பிறந்த 6 நாட்களிலேயே குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மேட்கொண்டுள்ளனர்.தற்போது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.ஒரு வேளை இக்குழந்தை 40 வது வாரத்தில் பிறந்திருந்தால் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்திருக்கும்.குறை பிரசவத்தில் பிறந்ததால் வெற்றிகரமான சிகிச்சையை தொடர்ந்து 5 மாத குழந்தையாக பெற்றோருடன் விளையாடி வருகின்றது.