Wedding issue in India - கணவனின் கல்யாணத்துக்கு வந்த முதல் மனைவி : நடந்ததைப் பாருங்கள் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
79,307 Views
பஞ்சாபை சேர்ந்த சோனு (42) என்பவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரபல ஓட்டலில் வைத்து 18 வயது பெண்ணை சோனு இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார்.
இதனை அறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சென்று சோனுவிடம் சண்டையிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் ராக்கியை யாரென்றே எனக்கு தெரியாது என சோனு கூற, கோபமடைந்த ராக்கி தனது கணவனின் சட்டையை இழுத்து பிடித்து அடித்துள்ளார். மண மகளுக்கும் அடை உதை விழுந்து உள்ளது.
மேலும் உறவினர்களும் சேர்ந்து வீதியில் வைத்து அடித்து உதைத்து உள்ளனர். என்னை விவாகரத்து செய்துகொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்றும் அவர் மீது பொலிஸில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.