நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம், உலகம் பூராகவும் பெண்களைக் கௌரவிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
நிலமை இவ்வாறு இருக்க, தெல்பிட்டிய , வெட்டஹேன பிரதேசத்தில் பெண்ணொருவர் மூர்க்கமாக தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
56 வயதான தாயொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
மூன்று பெண்கள் மற்றும் 20 வயதான இளைஞனொருவனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலினால் ஏற்பட்ட மோசமான காயங்களை அடுத்து குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.