அமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தொடர்பில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டமை தொடர்பாக குற்றவியல் புலனாய்வு ஒன்றை அமெரிக்க மத்திய உளவு நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.
சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாக கூறப்படும் பல வகையான கணினி அமைப்புகளை ஊடுருவும் சாதனங்களின் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், விக்கிலீக்ஸ் ஆவண கசிவுகளால் அமெரிக்க மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக சி.ஐ.ஏ செய்தி தொடர்பாளர் சர்வதேச செய்திச் சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் மற்றும் பிற எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கின்ற உளவுத்துறை சமூகத்தின் திறனை சேதப்படுத்துகின்ற வகையில் இது வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.